இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் இருந்து 350க் கும் மேற்பட்ட பயணிகள், 42 லாரிகள், 8 கார்களும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட `லெவினா-1′ என்ற கப்பல் நடுக்கடலில் தீ பிடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீயில் கருகி 17 பயணிகள் பலியாயினர். கடலில் மூழ்கி 19 பேர் பலியா னார்கள். மற்ற பயணிகளை கடற் படையினர் பத்திரமாக மீட்டனர்.
source: மாலைமலர்
பசிபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையே 1500க்கும் மேற்பட்ட குட்டி தீவுகளால் ஆன இந் தோனேசியாவில் பங்கா தீவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லெவினா.1 என்ற சிறுகப்பலில் 350க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஜகார்தாவில் உள்ள தான்ஜ×ங் துறைமுகத்தில் சில பயணிகளை இறக்கி ஏற்றிவிட்டு சென்ற கப்பலில் தீ பிடித்தது.
350 பயணிகளும் தீயில் சிக்கியதில் சிலர் உயிர் பிழைக்க கடலில் குதித்தனர். இன்னும் சிலர் புகை மண்டலத்தில் சிக்கியுள்ளனர். தகவல் கிடைத்ததும் கப்பல் படை படகுகளும், ஹெலி காப்டர்களும் அந்த பகுதிக்கு விரைந்துள்ளன.
*source மாலைமலர்