தொடங்கும் ஜனவரி 2008 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அமெரிக்கா செல்ல பிறப்பு சான்றிதழ் மட்டுமே போதுமானது.
ஆனால் ஆகாய வழியாக செல்லபவர்களுக்கு இப்பொழுது இருக்கும் நடைமுறை தொடரும்.
தொடங்கும் ஜனவரி 2008 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அமெரிக்கா செல்ல பிறப்பு சான்றிதழ் மட்டுமே போதுமானது.
ஆனால் ஆகாய வழியாக செல்லபவர்களுக்கு இப்பொழுது இருக்கும் நடைமுறை தொடரும்.
மூன்று வயதுக்குட்பட்ட இந்திய குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகமும், ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் ஒரு ஆய்வை நடத்தின. இதில் 46 சதவீத இந்திய குழந்தைகள் போதிய சத்துணவு இன்றி வாடுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
எத்தியோப்பியா போன்ற வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட 35 சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளே சத்துணவு குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் தாய்மார்களின் அறியாமை மற்றும் சுகாதாரச் சேவைகளில் உள்ள குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு போதுமான சத்துணவு கிடைப்பதில்லை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. பட்ஜெட் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. பரவலான போக்குவரத்து வசதி உள்ளது. குறித்த காலத்துக்குள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தேவையான பலமும் இருக்கிறது என்கிறார் யுனிசெப் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மார்சியோ பேபில்லி.