இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது – தமிழர்கள் அச்சம்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.

மேலும்…

அரசியல், ஈழம் - இலங்கை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சிரீலங்காவிற்கு ‘அம்மா’ விஜயம்


தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டியவீடுகளை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்த ஆன்மிகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி , எல்லோராலும் ‘அம்மா‘ என அழைக்கப் படுபவர், வெள்ளியன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.

இலங்கை அதிபர் மகேந்திர ராஜபக்ஷெயின் அழைப்பினை ஏற்று செல்லும் அவர், அவரது மடம் அங்கு சுனாமியால் பாதிப்ப்படைந்தவர்களுக்கு கட்டிய வீடுகளின் சாவிகளை அவரிடம் ஒப்படைப்பார் எனத் தெரிகிறது. மேற்கு மாநிலத்தில் கலுதராவிலும் கிழக்கு மாநிலத்தில் அம்பாரையிலும் சேர்ந்து 600 ச.அடி கொண்ட 96 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் ‘அம்மா’ இலங்கை சென்று சுனாமி மறுவாழ்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஆன்மீகம், ஈழம் - இலங்கை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »