திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய கொட்ரொக்கி கடந்த 6ம் தேதி அர்ஜென்டின அரசால் கைதுசெய்யப்பட்டார். இவரை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் இவர் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலதிக விவரங்களுக்கு
புவனேஸ்வர், பிப். 24- ஒரிசாவில் முதல்- மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சயத்தில் பிஜூ ஜனதா தளம்-பாரதீய ஜனதா கூட்டணி 23 இடங்களை கைப்பற்றியுள்ளது. பிஜூ ஜனதா தளம் 19 மாவட்ட பஞ்சாயத்துகளை யும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பாரதீய ஜனதா 4 இடங் களில் வெற்றி பெற்றது.
பெங்களூரில் பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் “இ-பைசைக்கிள்” என்ற இருசக்கர அறிமுகமுகப்படுத்தியுள்ளது
வாகனத்தை சேவியோ என்ற நிறுவனம் இமாசல பிரதேசத்தில் தயாராகின்றது. சீனாவில் இருந்து பேட்டரிஇறக்குமதியாகிறது.
அரை யூனிட் மின்சாரம் இருந்தால் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ. ஓட்டலாம். சார்ஜ் தீர்ந்தால் பெடல் செய்தும் ஓட்டலாம். பேட்டரியை தனியே பிரித்தெடுத்து சார்ஜ் செய்த பிறகு சைக்கிளில் பொருத்திக் கொள்ளலாம்.
இதில் 120 கிலோ பளு எடுத்து செல்லலாம். டபுள்ஸ் செல்லலாம். பிரேக் பிடித்ததும் பேட்டரி தானாக ஆஃப் ஆகிவிடும். சிக்னலிலோ, மற்ற இடங்களிலோ நிற்கும் நேரத்தில் மின்சாரம் செலவாகாது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.
ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இ-பைசைக்கிளை பெங்களூரில் சுசில் வித்யுத் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மாலை முரசில் வந்த செய்தி. வேறு சுட்டி கிடைத்தால் Update செய்யப்படும்.
மகிந்த்ரா, ரெனால்ட் மற்றும் நிஸான் இணைந்து சென்னையில் ரூ. 4,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை துவங்க உள்ளனர்.
சன் டிவி நிறுவனம் சிக்னல் பவழங்க மறுப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் தாக்குதலை சமாளித்த அரசு நாளை இது பற்றி முழு விவரங்களையும் வெளியிட உறுதியளித்துள்ளது. ஒளிப்பதற்கு தங்களிடம் எதுவும் இல்லை என நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி இன்று கூறினார்.
எதிர்க் கட்சிகளின் ஒட்டு மொத்த ராஜினாமா, அமளிக்கு இடையே இன்று சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ்.
402 பேர் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 201 உறுப்பினர்கள் தேவை.
இதில் கடந்த 25ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 223 வாக்குகள் கிடைத்தன. இந் நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பின்போது பாஜக தவிர்த்த எதிர்க் கட்சிகள் வரிசை காலியாக இருந்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்ட நிலையில் பாஜகவினர் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
ராஜினாமா செய்த பகுஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவைக்கு வெளியிலும் பாஜகவினர் உள்ளேயும் அமளியில் ஈடுபட்ட நிலையில் குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் முலாயம் அரசு வென்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
அரசுக்கு ஆதரவாக 214 உறுப்பினர்கள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதன் மூலம் தேர்தல் முடியும் வரை முலாயம் சிங்கே முதல்வராக பொறுப்பில் இருக்க முடியும். இம் மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி- தட்ஸ்தமிழ்
சற்றுமுன் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த 2007-2008ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
முதல் வகுப்பு ஏசி கட்டணம் குறைகிறது
புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் விலையில் ரூ 1 குறைக்கப்படுகிறது
அதிவேக ரயில்களில் 2ம் வகுப்புக்கான கட்டணத்தின் மீதான சர்சார்ஜ் 20 சதவீதம் குறைக்கப்படும்
ஐஐஎம் அகமதாபாத்தில் ரயில்வே நிர்வாகம் குறித்த பிரிவு தொடங்கப்படும்
ரயில்வே தனியார்மயமாகாது
முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்
எஃகு, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தனி ரயில்கள்
32 புதிய ரயில்கள் அறிமுகம்
டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாம்டாப் வழங்கப்பட்டு, காலியான சீட்கள் குறித்த விவரம் அப்டேட் செய்யப்படும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்வே மின் மயமாக்கப்படும்
8 புதிய ஏழைகள் ரதம்ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்
நாடு முழுவதும் ரயில்வே கால் சென்டர்கள் அமைக்கப்படும்
ரயில் வருகைகிளம்பும் நேரம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும்
ரயில்வே இந்த ஆண்டு ரூ. 20,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
பொதுப் பெட்டிகளில் (அன்ரிசவர்ட்)மரக் கட்டை சீட்களுக்கு பதிலாக குஷன் சீட்கள் போடப்படும்.
பிபாவாஜெய்ப்பூர் இடையே இரட்டை அடுக்கு ரயில் விடப்படும். இந்த சோதனை ரயில் வெற்றி பெற்றால் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.
சரக்குப் போக்குவரத்துக்கு 3 அடுக்கு ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
முன் பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
நாடு முழுவதும் 8,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் அமைக்கப்படும்
பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்களில் ரயில் டிக்கெட் விற்பனை
பால், காய்கறி கொண்டு போக பயணிகள் ரயில்களில் தனிப் பெட்டிகள்
யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்கு 50% கட்டண சலுகை
முதியோர்கள், பெண்களுக்கு லோயர் பர்த்தில் முன்னுரிமை வழங்கப்படும்.